முருக நாதீஸ்வரர்
பெரிதாக ஏதும் பழமையின் சின்னம் இல்லாமல் முற்றிலும் புதுமையும் ஏற்காமல்
கடந்த கால நினைவுகளில் தன் காலத்தை கழிக்கும் ராஜராஜர் காலத்திய கற்றளி.
மாம்பாக்கதிலிருந்து மேடவாக்கம் செல்லும் சாலையில் வலதுபுறமாக சாலையை ஒட்டி அமைந்துள்ளது.
"ஸ்ரீ திருமகள் போல" என தொடங்கும் ராஜராஜர் கல்வெட்டு ஒன்று இக்கோவிலுக்கு விளக்கு எரிக்க முருகன் கலியன் என்பவர் தானம் அளித்த தகவலை கூறுகிறது.கல்வெட்டு சிதைந்து உள்ளதால் பிற தகவல்கள் தெரியவில்லை.
இவ்வூர் இன்று வழங்கும் பெயரிலே புலியூர் கோட்டத்து கால்வாய் நாட்டு பிரிவில் இருந்துள்ளது.
இங்குள்ள மற்றொரு துண்டு கல்வெட்டில் ஸ்ரீ ஆதித்தன் என்ற பெயர் மட்டும் உள்ளது.